search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் மேலும் 6 ரவுடிகள் கைது
    X

    சேலத்தில் மேலும் 6 ரவுடிகள் கைது

    சேலத்தில் மேலும் 6 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் புதிய எஸ்.பி. தீபா கானிகேர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

    அவரது உத்தரவின் பேரில் போலீசார் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மேலும் 6 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதுவரை மொத்தம் 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சிலர் சேலத்தை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

    Next Story
    ×