search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரம் அருகே மலை கிராம மக்களை அச்சுறுத்தும் ஒற்றை யானை
    X

    ஒட்டன்சத்திரம் அருகே மலை கிராம மக்களை அச்சுறுத்தும் ஒற்றை யானை

    ஒட்டன்சத்திரம் அருகே மலை கிராம மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையால் தொடர்ந்து பீதியடைந்து வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட மலைகிராமங்களான வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், வண்டிப்பாதை, புலிக்குத்திக்காடு உள்பட பல்வேறு மலை கிராமங்களில் காட்டு யானைகள், சிறுத்தைப் புலிகள், மான்கள், காட்டு எருமைகள், குரங்குகள், செந்நாய்கள், மலைப்பாம்புகள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மலைப் பகுதியில் ஒற்றை யானை இரவு நேரங்களில் சாலையில் நின்றுகொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றது.

    ஒட்டன்சத்திரத்திலிருந்து உணவு பொருட்களை வாங்கிச் சென்ற பெத்தேல்புரம், வடகாடு பகுதி பொதுமக்களை சாலையில் வழிமறித்து அச்சுறுத்தி தாக்கியது. மேலும் கடந்த மாதம் யானை ரேசன் கடைகளில் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூரையாடியது.

    அதுமட்டு மல்லாமல் அருகில் உள்ள பள்ளியின் மேற்கூரை, வாழை மரங்களையும் நாசப்படுத்தியுள்ளது. யானை மலைக்கிராமங்களுக்குள் சுற்றித்திரிந்து விவசாயிகளின் நிலங்களையும் சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் தங்களின் அன்றாட பணிகளை செய்ய முடியாமலும் தினமும் அச்சத்துடனையே வாழ்ந்து வருகின்றனர்.

    எனவே வனத்துறையினர் சுற்றித்திரியும் ஒற்றை யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×