search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொண்டியில் மாயமான 3 மாணவிகள் திருச்சியில் மீட்பு
    X

    தொண்டியில் மாயமான 3 மாணவிகள் திருச்சியில் மீட்பு

    தொண்டியில் மாயமான 3 பள்ளி மாணவிகள் திருச்சியில் மீட்கப்பட்டனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி வேலம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகள் ஆர்த்தி (வயது 15). அதே தெருவில் வசிப்பவர்கள் குமார் மகள் அஸ்வினி (15), முருகானந்தம் மகள் கனிகா (14).

    இவர்கள் 3 பேரும் தொண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். நேற்று மாலையில் வீட்டில் இருந்த ஆர்த்தி, அஸ்வினி, கனிகா ஆகியோர் திடீரென மாயமானார்கள்.

    இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர்கள் மகள்களை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இதுகுறித்து ஆர்த்தியின் தாய் சித்ரா, தொண்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து மாயமான 3 மாணவிகளை தேடி வந்தார்.

    இதனிடையே 3 பேரும் நேற்று இரவு திருச்சியில் உள்ள ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 3 பேரையும் ரெயில்வே போலீசார் விசாரித்தபோது, வீட்டில் இருந்து வெளியேறியது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவிகளை மீட்ட போலீசார் தொண்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மாணவிகளை அழைத்து வர திருச்சிக்கு சென்றனர்.

    Next Story
    ×