search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாத்தா என்று அழைத்த குழந்தையிடம் மாமா என்று சொல்ல சொன்ன ஸ்டாலின்
    X

    தாத்தா என்று அழைத்த குழந்தையிடம் மாமா என்று சொல்ல சொன்ன ஸ்டாலின்

    சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டியில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் தாத்தா என்று அழைத்த குழந்தையிடம் மாமா என்று மு.க.ஸ்டாலின் அழைக்க சொன்னார். #DMK #MKStalin
    சாத்தூர்:

    தி.மு.க. சார்பில் ‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்’ என்பதை முன் நிறுத்தி தமிழ்நாடு முழுக்க ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டியில் நேற்று நடந்த ஊராட்சிசபை கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாடினார். இந்த வீடியோவை தி.மு.க. வின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த கூட்டத்தில் பல பெண்கள் கலந்துகொண்டு தங்களின் தேவைகளையும் குறைகளையும் ஸ்டாலினிடம் முறையிட்டனர்.

    அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு குழந்தையும் பேசியது. அந்த குழந்தை பேசும்போது, ‘ஸ்டாலின் தாத்தா வணக்கம்’ என கூறுகிறாள். உடனடியாக குறுக்கிடும் ஸ்டாலின் ‘ஸ்டாலின் தாத்தா இல்லை, ஸ்டாலின் மாமா’ என கூறுகிறார். இதை கேட்டு அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்து சிரிக்கின்றனர்.

    பிறகு உன் பெயர் என்ன என ஸ்டாலின் கேட்கிறார். அதற்கு குழந்தை மஹிதா, எல்.கே.ஜி எனக் கூற அந்த குழந்தைக்கு வாழ்த்து கூறுகிறார்.

    பிறகு அந்த குழந்தை “நான் உங்களுக்காக ஒரு பாட்டு பாடுகிறேன் எனச் சொல்லிவிட்டு, ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா...” என்ற பாடலை பாடி அசத்துகிறார். குழந்தையின் மழலை பேச்சும் ஸ்டாலின் பதிலும் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகிறது. #DMK #MKStalin
    Next Story
    ×