search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இந்த மாத இறுதிக்குள் முடிவு - எல்.கே.சுதீஷ்
    X

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இந்த மாத இறுதிக்குள் முடிவு - எல்.கே.சுதீஷ்

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என்று தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார். #ParliamentElection #DMDK
    சென்னை:

    தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார். அவர் விரைவில் தமிழகம் திரும்ப உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் முடிவு எட்டப்படும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதுவே தான் எங்களுடைய கோரிக்கையாக இப்போதும் உள்ளது.

    கூட்டணி குறித்து விஜயகாந்த் வந்த பின்னர் தான் உறுதி செய்யப்படும். தே.மு.தி.க. இருக்கும் கூட்டணி வலிமையானதாக இருக்கும். நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி, தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெறும். எங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்த பின்னர், பெயரிடப்படும். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பிரசாரம் மற்றும் இதர தகவல்கள் பற்றி அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #DMDK
    Next Story
    ×