search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நினைவு தினத்தையொட்டி அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
    X

    நினைவு தினத்தையொட்டி அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

    அண்ணா நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    திருச்சுழி:

    திருச்சுழியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு நகர செயலாளர் சொக்கர் தலைமையில் ஊராட்சி செயலாளர் பால முருகன், கூட்டுறவு சங்க தலைவர் வீரக்குமார், கூட்டுறவு சங்க இயக்குனர் மடத்துப்பட்டி முத்துராஜா, தலைக்குளம் கருப்பு, புதூர் செல்வராஜ், பாறைகுளம் சுந்தர்ராஜ், புலி மருது, சுப்புராஜ் உள்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். இதேபோல் கல்லூரணியில் கிளை செயலாளர் முத்துவேல், கனகராஜ், அவைத் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்டோரும், மடத்துப்பட்டியில் கிளை செயலாளர் முத்துராஜா தலைமையில் நிர்வாகிகளும் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டி நிலவள வங்கி அலுவலகத்தில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் சித்திக், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் கல்லூரணி முனியாண்டி, எம்.ஜி.ஆர். இளைஞரணி ஒன்றிய செயலாளர் ராஜாராம், ஒன்றிய கவுன்சிலர்கள் அங்கையற்கண்ணி, கூட்டுறவு சங்க தலைவர் ராமலிங்கம் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

    சாத்தூரில் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வாசன், பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் டெய்சிராணி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு அண்ணா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. சார்பில் வடக்குரதவீதியில் நகர செயலாளர் குருசாமி, கோசுகுண்டு சீனிவாசன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் அசோக், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் திருவேங்கடசாமி, கடற்கரை ராஜ், மாவட்ட பிரதிநிதி முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் சங்கர், ஒன்றியச் செயலாளர்கள் முருகேசன், சரவணக்குமார் மற்றும் நிர்வாகிகள் அண்ணா படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அண்ணா நினைவு தினத்தையொட்டி சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் கலெக்டர் சிவஞானம், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, அறநிலையத்துறை இணை ஆணையர் ஹரிஹரன், செயல் அலுவலர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, நகரச் செயலாளர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க. நகர செயலாளர் கண்ணன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் ஜெயலலிதா பேரவை செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் கொப்பையராஜ், நகர துணை செயலாளர் முனியசாமி, அவைத்தலைவர் மணி, பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ராமச்சந்திரன், சவுண்டையா, கலுசிவலிங்கம் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.

    அ.ம.மு.க. சார்பில் நகர செயலாளர் முத்து தலைமையில் அண்ணா சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது. இதில் மாவட்ட அவை தலைவர் ராமர், ஜெயலிதா பேரவை செயலாளர் வீரகணேசன், அவை தலைவர் கருப்பசாமி, துணை செயலாளர்கள் பரசுராமன், பூப்பாண்டி உள்பட அ.ம.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    நகர தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ் தலைமையில் நகர செயலாளர் மணி, மாவட்ட பொருளாளர் சாகுல்அமீது முன்னிலையில் நேரு மைதானத்திலிருந்து தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், பாலகணேஷ் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×