search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரியில் தேயிலை தோட்டங்களில் சுற்றிதிரியும் காட்டெருமைகள் - தொழிலாளர்கள் பீதி
    X

    கோத்தகிரியில் தேயிலை தோட்டங்களில் சுற்றிதிரியும் காட்டெருமைகள் - தொழிலாளர்கள் பீதி

    கோத்தகிரியில் தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் மற்றும் காய்கறி விலை நிலங்களை ஒட்டி குடியிருப்புகள் அமைந்துள்ளன.

    இவற்றை சுற்றி வனப்பகுதியும் உள்ளது. இந்த வனபகுதியில் காட்டுயானை, காட்டெருமைகள், மான் சிறுத்தைபுலி உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றிதிரிகின்றன.

    வனப்பகுதியை ஆக்கிரமித்தும் விலை நிலங்களை அழித்தும் சொகுசு விடுதிகள் மற்றும் குடியிருப்புகள், காட்டேஜ்கள், தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகின்றன இதன் காரணமாக வன விலங்குகளின் வழித்தடம் அழிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2 மாதங்களாக கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பனிப்பொழிவு இருந்து வருகிறது இதனால் வறட்சியான காலநிலை நிலவுகிறது.

    வனப்பகுதியில் மரம் செடி கொடிகள் கருகி விட்டன. மேலும் நீர் நிலைகளும் வறண்டு வருவதால் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுவது அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் மனித -வன விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வதும் வாடிக்கையாகிவிட்டது.

    கோத்தகிரி குடியிருப்பு பகுதிகளில் குப்பை தொட்டிகளில் வீசப்படும் மீதமான உணவுகளை சாப்பிடுவதற்கு காட்டுப் பன்றி, கரடி, காட்டெருமை போன்ற வன விலங்குகள் புகுந்து வருகின்றன. இவை அவ்வப்போது பொதுமக்களை அச்சுறுத்துகின்றன.

    இந்த நிலையில் கோத்தகிரி - மேட்டுப் பாளையம் சாலையில் கைத்தளா அருகே உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.இதனால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர். #tamilnews
    Next Story
    ×