என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடு புகுந்து தாக்கியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி - 2 பேர் கைது
Byமாலை மலர்5 Feb 2019 5:14 PM GMT (Updated: 5 Feb 2019 5:14 PM GMT)
குத்தாலம் அருகே வீடு புகுந்து தாக்கியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே செங்குழி கீழதெருவை சேர்ந்த கண்ணயைன் என்பவர் மகள் வசந்தி (வயது 32) இவரும், அதே பகுதியை சேர்ந்த வீரமணி மகள் ஐஸ்வர்யா என்பவரும் அத்திகாடு என்ற இடத்தில் செயல்படும் ஒரு கடையில் டைலராக வேலைபார்த்து வந்தனர்.
இந்த நிலையில் வசந்தியையும், ஐஸ்வர்யாவையும திடீரென நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அதே கடைக்கு ஐஸ்வர்யா மட்டும் மீண்டும் வேலைக்கு செல்வது வசந்திக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் ஐஸ்வர்யாவிடம் கேட்ட போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி ஐஸ்வர்யா தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரமணி, அவரது மனைவி தவமணி மகன் சுரேந்தர் ஆகியோர் வசந் வீட்டுக்கு சென்று தகராறு செய்து அவரை கட்டையால் அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வசந்தி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றிய புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து வீரமணி, சுரேந்தர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். #tamilnews
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே செங்குழி கீழதெருவை சேர்ந்த கண்ணயைன் என்பவர் மகள் வசந்தி (வயது 32) இவரும், அதே பகுதியை சேர்ந்த வீரமணி மகள் ஐஸ்வர்யா என்பவரும் அத்திகாடு என்ற இடத்தில் செயல்படும் ஒரு கடையில் டைலராக வேலைபார்த்து வந்தனர்.
இந்த நிலையில் வசந்தியையும், ஐஸ்வர்யாவையும திடீரென நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அதே கடைக்கு ஐஸ்வர்யா மட்டும் மீண்டும் வேலைக்கு செல்வது வசந்திக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் ஐஸ்வர்யாவிடம் கேட்ட போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி ஐஸ்வர்யா தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரமணி, அவரது மனைவி தவமணி மகன் சுரேந்தர் ஆகியோர் வசந் வீட்டுக்கு சென்று தகராறு செய்து அவரை கட்டையால் அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வசந்தி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றிய புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து வீரமணி, சுரேந்தர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X