search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறந்தாங்கி அருகே பரிதாபம் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
    X

    அறந்தாங்கி அருகே பரிதாபம் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

    அறந்தாங்கி அருகே கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பிராமணவயலைச் சேர்ந்தவர் பழனிவேலு மகள் சரண்யா (வயது 20). இவர் அரசு கல்லூரியில் படித்து வந்தார்.

    அவருக்கு அடிக்கடி சிறிய அளவில் மனநிலை பாதிப்பு ஏற்படுவது வழக்கம். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் மாணவி முழுமையாக குணமடையவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரண்யா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×