என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரியில் மணல் கடத்தியவர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டல் - 5 பேர் கைது
Byமாலை மலர்4 Feb 2019 11:52 AM GMT (Updated: 4 Feb 2019 11:52 AM GMT)
ஆயுதங்களுடன் மாமூல் கேட்டு மிரட்டியதாக 5 பேரை கைது செய்த போலீசார் மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளரிக்குளம் கூட்டு சாலையில் 5 வாலிபர்கள் ஒரு மினி லாரியை மடக்கி பிடித்து தகராறில் ஈடுபட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விபத்து நடந்ததாக நினைத்து செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது லாரியில் இருந்த 2 வாலிபர்கள் திடீரென தப்பி ஓட்டம் பிடித்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அறிந்த திருவூர் பகுதியை சேர்ந்த டில்லி, சுரேந்தர், சுரேஷ்ராஜ் ஆகியோர் மணல் லாரியை மடக்கி மாமூல் பணம் கேட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆயுதங்களுடன் மாமூல் கேட்டு மிரட்டியதாக டில்லி உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் லாரியில் மணல் கடத்திய கலாம்பாக்கத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளரிக்குளம் கூட்டு சாலையில் 5 வாலிபர்கள் ஒரு மினி லாரியை மடக்கி பிடித்து தகராறில் ஈடுபட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விபத்து நடந்ததாக நினைத்து செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது லாரியில் இருந்த 2 வாலிபர்கள் திடீரென தப்பி ஓட்டம் பிடித்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அறிந்த திருவூர் பகுதியை சேர்ந்த டில்லி, சுரேந்தர், சுரேஷ்ராஜ் ஆகியோர் மணல் லாரியை மடக்கி மாமூல் பணம் கேட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆயுதங்களுடன் மாமூல் கேட்டு மிரட்டியதாக டில்லி உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் லாரியில் மணல் கடத்திய கலாம்பாக்கத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X