என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குடிபோதையில் தகராறு- பூ வியாபாரியை அடித்து கொன்ற ஆட்டோ டிரைவர்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் அய்யனான் தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 80). பூ வியாபாரி.
இவர், கடந்த 30-ந் தேதி அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே மயங்கி கிடந்தார். இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன்(43), கணேசனின் மகன் சித்திரவேலுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சித்திரவேல் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கணேசனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை உறவினர்கள், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
கணேசனின் உடலில் காயங்கள் இருந்ததால் அவருடைய சாவு குறித்து சித்திரவேல் மற்றும் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து சித்திரவேல், கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கள்ளப்பெரம்பூர் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சம்பவத்தன்று கணேசன், சரவணன் ஆகிய இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் கட்டையால், கணேசனை தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதனால் பதற்றம் அடைந்த சரவணன், கணேசன் மது குடித்து விட்டு மயங்கி கிடப்பதாக சித்திரவேலிடம் பொய் கூறி நாடகமாடியது தெரியவந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்