என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செந்துறை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்- டிரைவர் கைது
Byமாலை மலர்3 Feb 2019 2:39 PM GMT (Updated: 3 Feb 2019 2:39 PM GMT)
செந்துறை அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆதனங்குறிச்சி வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக தளவாய் போலீசாருக்கு தகவல் கிடை த்தது. இதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் அங்கு ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும் 2 டாரஸ் லாரிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒரு லாரியை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். அதற்குள் மற்றொரு லாரி, பொக்லைன் எந்திரமும் எடுத்து தப்பி ஓடி விட்டனர்.
அதனை தொடர்ந்து பிடிபட்ட லாரி மற்றும் டிரைவரை தளவாய் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரியை பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சீமான் என்பவர் ஓட்டி வந்து மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து தளவாய் போலீசார் வழக்குபதிவு செய்து சீமானை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர் ராஜாவை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X