search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் குடியிருப்புகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
    X

    போலீஸ் குடியிருப்புகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

    பெரம்பலூர் தண்ணீர்பந்தல் அருகே உள்ள ஆயுதப்படை போலீசார் குடியிருப்பில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.வரதராஜூ திறந்து வைத்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள போலீசார் குடியிருப்பு, பெரம்பலூர் தண்ணீர்பந்தல் அருகே உள்ள ஆயுதப்படை போலீசார் குடியிருப்பு ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூ கலந்து கொண்டு, குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குடிநீரை போலீசாரின் குடும்பத்தினரின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    இதில் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. லலிதாலட்சுமி, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ரெங்கராஜ், தங்கவேலு உள்பட குடியிருப்புகளில் வசிக்கும் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் ஐ.ஜி. வரதராஜூ மன அழுத்தத்தை குறைக்க போலீசாருக்கு நடத்தப்படும் பயிற்சி முகாமினை பார்வையிட்டார். 
    Next Story
    ×