என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலை பிடிக்காததால் தனியார் மில் அதிகாரி தற்கொலை
Byமாலை மலர்2 Feb 2019 5:44 PM GMT (Updated: 2 Feb 2019 5:44 PM GMT)
பெருந்துறை அருகே வேலை பிடிக்காததால் தனியார் மில் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை:
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள மோதூரை சேர்ந்தவர் வெங்கடேஷ். அவருடைய மகன் குமார் (வயது 22). இவர் பி.டெக். என்ஜினீயரிங் முடித்துவிட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் மில்லில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார். கடந்த 1½ ஆண்டாக பணியாற்றி வந்தார்.
பெருந்துறை அருகே உள்ள காசிபில்லாம்பாளையத்தில் வாடகைக்கு அறை எடுத்து நண்பர்கள் 3 பேருடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் குமாருக்கு வேலை பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஓட்டலில் சாப்பிட அவருக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து தனது தாயை செல்போனில் தொடர்பு கொண்டு கூறி வருத்தப்பட்டுள்ளார்.
அதற்கு அவர், ‘வேறு வேலை கிடைக்கும் வரை இந்த வேலையை செய். அதுவரை பொறுமையாக இரு‘ என்று கூறி ஆறுதல்படுத்தியுள்ளார். ஆனால் குமார் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து குமார் அறைக்கு வந்தார். பின்னர் அவர் விஷம் குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள மோதூரை சேர்ந்தவர் வெங்கடேஷ். அவருடைய மகன் குமார் (வயது 22). இவர் பி.டெக். என்ஜினீயரிங் முடித்துவிட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் மில்லில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார். கடந்த 1½ ஆண்டாக பணியாற்றி வந்தார்.
பெருந்துறை அருகே உள்ள காசிபில்லாம்பாளையத்தில் வாடகைக்கு அறை எடுத்து நண்பர்கள் 3 பேருடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் குமாருக்கு வேலை பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஓட்டலில் சாப்பிட அவருக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து தனது தாயை செல்போனில் தொடர்பு கொண்டு கூறி வருத்தப்பட்டுள்ளார்.
அதற்கு அவர், ‘வேறு வேலை கிடைக்கும் வரை இந்த வேலையை செய். அதுவரை பொறுமையாக இரு‘ என்று கூறி ஆறுதல்படுத்தியுள்ளார். ஆனால் குமார் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து குமார் அறைக்கு வந்தார். பின்னர் அவர் விஷம் குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X