என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே இளம்பெண் புகாரில் கணவர் கைது
Byமாலை மலர்1 Feb 2019 11:53 AM GMT (Updated: 1 Feb 2019 11:53 AM GMT)
ஒரத்தநாடு அருகே இளம்பெண் அளித்த புகார் தொடர்பாக அவரது கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே சில்லத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ்(வயது 40). இவரது மனைவி சந்தியா(38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியா கள்ளக்காதலனுடன் குழந்தைகள், கணவரை விட்டு தலைமறைவானார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பிய சந்தியாவை போலீசார் அழைத்து கணவருடன் சமரசம் செய்துள்ளனர். அப்போது பாக்கியராஜ் மனைவி செய்த தவறை மன்னித்து ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சந்தியா ஒரத்தநாடு போலீசில் கணவர், அவரது தம்பி சங்கர்(42), சங்கரின் மனைவி பானு(34), மாமியார் தங்கம்மாள்(70) ஆகிய 4 பேர் மீதும் புகார் கொடுத்தார்.
அதில் 4 பேரும் தன்னை வீட்டை விட்டு ஓடியது தொடர்பாக தொடர்ந்து திட்டி கொடுமைப்படுத்துவதாக தெரிவித்திருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்தனர்.
ஒரத்தநாடு அருகே சில்லத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ்(வயது 40). இவரது மனைவி சந்தியா(38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியா கள்ளக்காதலனுடன் குழந்தைகள், கணவரை விட்டு தலைமறைவானார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பிய சந்தியாவை போலீசார் அழைத்து கணவருடன் சமரசம் செய்துள்ளனர். அப்போது பாக்கியராஜ் மனைவி செய்த தவறை மன்னித்து ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சந்தியா ஒரத்தநாடு போலீசில் கணவர், அவரது தம்பி சங்கர்(42), சங்கரின் மனைவி பானு(34), மாமியார் தங்கம்மாள்(70) ஆகிய 4 பேர் மீதும் புகார் கொடுத்தார்.
அதில் 4 பேரும் தன்னை வீட்டை விட்டு ஓடியது தொடர்பாக தொடர்ந்து திட்டி கொடுமைப்படுத்துவதாக தெரிவித்திருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X