என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே மணல் அள்ளிய லாரி பறிமுதல் - 3 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்1 Feb 2019 11:24 AM GMT (Updated: 1 Feb 2019 11:24 AM GMT)
திருவையாறு அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய லாரியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
திருவையாறு:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஆர்.எம்.எஸ்.காலனியை சேர்ந்தவர் சசிகுமார் (42). பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர் சேகர் (50). சசிகுமாருக்கு சொந்தமான லாரியில் திருவையாறு அருகே உப்புக்காச்சிபேட்டை காவிரி ஆற்றில் மணலை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது அதை சக்திவேல் என்பவர் ஓட்டிவந்தார். லாரிக்கு முன்பு சசிகுமார் சேகரும், பாதுகாப்பாக சென்று கொண்டிருந்தனர். இந்த தகவல் திருவையாறு போலீசாருக்கு தெரியவந்தது.
இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்- இன்ஸ்பெக்டர் வேம்பு, மற்றும் போலீசாருடன் நடுக்கடை மெயின் ரோட்டில் லாரியை மறித்த போது டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். சோதனையில் லாரியில் அனுமதியில்லாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து திருவையாறு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து சசிகுமார், சேகர், சக்திவேல் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஆர்.எம்.எஸ்.காலனியை சேர்ந்தவர் சசிகுமார் (42). பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர் சேகர் (50). சசிகுமாருக்கு சொந்தமான லாரியில் திருவையாறு அருகே உப்புக்காச்சிபேட்டை காவிரி ஆற்றில் மணலை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது அதை சக்திவேல் என்பவர் ஓட்டிவந்தார். லாரிக்கு முன்பு சசிகுமார் சேகரும், பாதுகாப்பாக சென்று கொண்டிருந்தனர். இந்த தகவல் திருவையாறு போலீசாருக்கு தெரியவந்தது.
இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்- இன்ஸ்பெக்டர் வேம்பு, மற்றும் போலீசாருடன் நடுக்கடை மெயின் ரோட்டில் லாரியை மறித்த போது டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். சோதனையில் லாரியில் அனுமதியில்லாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து திருவையாறு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து சசிகுமார், சேகர், சக்திவேல் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X