search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவையாறு அருகே மணல் அள்ளிய லாரி பறிமுதல் - 3 பேர் மீது வழக்கு
    X

    திருவையாறு அருகே மணல் அள்ளிய லாரி பறிமுதல் - 3 பேர் மீது வழக்கு

    திருவையாறு அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய லாரியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
    திருவையாறு:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஆர்.எம்.எஸ்.காலனியை சேர்ந்தவர் சசிகுமார் (42). பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர் சேகர் (50). சசிகுமாருக்கு சொந்தமான லாரியில் திருவையாறு அருகே உப்புக்காச்சிபேட்டை காவிரி ஆற்றில் மணலை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது அதை சக்திவேல் என்பவர் ஓட்டிவந்தார். லாரிக்கு முன்பு சசிகுமார் சேகரும், பாதுகாப்பாக சென்று கொண்டிருந்தனர். இந்த தகவல் திருவையாறு போலீசாருக்கு தெரியவந்தது.

    இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்- இன்ஸ்பெக்டர் வேம்பு, மற்றும் போலீசாருடன் நடுக்கடை மெயின் ரோட்டில் லாரியை மறித்த போது டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். சோதனையில் லாரியில் அனுமதியில்லாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து திருவையாறு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து சசிகுமார், சேகர், சக்திவேல் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×