search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளிகளில் வருமான வரி சோதனை
    X

    தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளிகளில் வருமான வரி சோதனை

    தர்மபுரி பகுதியில் உள்ள 3 தனியார் பள்ளிகளில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி நகரம் மற்றும் அதியமான்கோட்டை பகுதியில் ஒரே குழுமத்தை சேர்ந்த 3 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் 3 வாகனங்களில் திடீரென்று 9 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். காலை 11 மணி முதல் அதியமான்கோட்டை பள்ளியில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை நடைபெறுவதால் மாணவ-மாணவிகளை  வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

    மேலும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களை வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதாக தெரிகிறது. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் கணினிகளை சோதனை செய்து வரவு செலவு தொடர்பான பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த சோதனையின்போது வருமான வரி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    3 பள்ளிகளில் வருமான வரி செலுத்துவதில் முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்று உள்ளதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த சோதனையில் வருமான வரி செலுத்துவதில் விதிமீறல் தொடர்பாக ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்ததா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    தர்மபுரி பகுதியில் உள்ள 3 தனியார் பள்ளிகளில் வருமான வரித்துறையினர் காலை 11 மணியில் இருந்து இரவு 10 மணிக்கும் மேல் நடைபெற்ற இந்த திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   
    Next Story
    ×