search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
    X

    4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் மயிலீஸ்(50). இவர் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். 

    புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குபதிவு செய்து, மயிலீசை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், குற்றவாளியான மயிலீசுக்கு 5 வருட சிறைத்தண்டனை மற்றும் ரூ. ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.
    Next Story
    ×