search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழகாபுரத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்த டாக்டர் மர்ம மரணம்
    X

    அழகாபுரத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்த டாக்டர் மர்ம மரணம்

    சேலம் அழகாபுரத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த டாக்டர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் அழகாபுரம் காண்வென்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாவேந்தன் (வயது 55). இவரது மனைவி புனிதா. இருவரும் டாக்டர்கள்.

    கருத்து வேறுபாடு காரணமாக புனிதா கடந்த 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து சென்னையில் வசித்து வருகிறார். இவர்களது ஒரே மகளை ஈரோட்டில் திருமணம் செய்து கொடுத்தனர். இதனால் பாவேந்தன் மட்டும் அழகாபுரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் 4 நாட்களாக வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம்அடைந்த அந்த பகுதியினர் அழகாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்று போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது கட்டில் அருகே கீழே விழுந்த நிலையில் டாக்டர் பாவேந்தன் இறந்துகிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

    இதுகுறித்துஅழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த டாக்டர் பாவேந்தன் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்ற இயக்கத்தில் தீவிர பக்தராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×