என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு அருகே தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளை
Byமாலை மலர்30 Jan 2019 3:09 PM GMT (Updated: 30 Jan 2019 3:09 PM GMT)
களக்காடு அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
களக்காடு
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மேல்கரையை சேர்ந்தவர் முருகன். இவர் சென்னையில் தங்கியிருந்து கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தா (வயது 38). சம்பவத்தன்று வசந்தா தனது மகளை பள்ளியில் விடுவதற்காக களக்காட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் அவரது வீட்டின் பின் பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த செயின், மோதிரம், கம்மல் உள்பட 8.25 பவுன் எடை கொண்ட தங்க நகைகளையும் மற்றும் ரூ. 30 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். பின்னர் வசந்தா வந்து பார்த்த போது கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X