என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டு வரி ரசீது கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
Byமாலை மலர்29 Jan 2019 6:08 PM GMT (Updated: 29 Jan 2019 6:08 PM GMT)
வீட்டு வரி ரசீது கேட்டு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிம்பலூர் ஊராட்சி மரவநத்தம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் கொட்டகை மற்றும் வீடுகள் அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் பிம்பலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று வீட்டு வரி ரசீது கேட்டபோது, வீட்டு வரி ரசீது வழங்கப்படவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை திடீரென வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அரும்பாவூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் வீட்டு வரி ரசீது வழங்கப்படும் என கூறினர். இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிம்பலூர் ஊராட்சி மரவநத்தம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் கொட்டகை மற்றும் வீடுகள் அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் பிம்பலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று வீட்டு வரி ரசீது கேட்டபோது, வீட்டு வரி ரசீது வழங்கப்படவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை திடீரென வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அரும்பாவூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் வீட்டு வரி ரசீது வழங்கப்படும் என கூறினர். இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X