என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 வீடுகளின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள் திருட்டு
Byமாலை மலர்29 Jan 2019 5:55 PM GMT (Updated: 29 Jan 2019 5:55 PM GMT)
குன்னம் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் படைகாத்து. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரிதா(வயது 32). இவர் நேற்று காலை அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சரிதா உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு மோதிரம், தங்க சங்கிலி என 5 பவுன் நகைகள் திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல் வேப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள அசோக் மனைவி ஜெயலட்சுமி(35). இவர் நேற்று கூலி வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் திருடுபோய் இருப்பது தெரிந்தது. இந்த 2 புகாரின் பேரில் குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் படைகாத்து. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரிதா(வயது 32). இவர் நேற்று காலை அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சரிதா உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு மோதிரம், தங்க சங்கிலி என 5 பவுன் நகைகள் திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல் வேப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள அசோக் மனைவி ஜெயலட்சுமி(35). இவர் நேற்று கூலி வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் திருடுபோய் இருப்பது தெரிந்தது. இந்த 2 புகாரின் பேரில் குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X