search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 வீடுகளின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள் திருட்டு
    X

    2 வீடுகளின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள் திருட்டு

    குன்னம் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் படைகாத்து. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரிதா(வயது 32). இவர் நேற்று காலை அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சரிதா உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு மோதிரம், தங்க சங்கிலி என 5 பவுன் நகைகள் திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதேபோல் வேப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள அசோக் மனைவி ஜெயலட்சுமி(35). இவர் நேற்று கூலி வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் திருடுபோய் இருப்பது தெரிந்தது. இந்த 2 புகாரின் பேரில் குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×