search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலத்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
    X

    திருமங்கலத்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

    திருமங்கலத்தில் பெண் ணிடம் 7 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

    மதுரை:

    திருங்கலம் அருகே உள்ள முகம்மதுஷாபுரம் போஸ் தெருவைச் சேர்ந்தவர் ராமராஜேஸ்வரன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது64). இவர் நேற்று காலை வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    மறவன்குளம் பகுதியில் விஜயலட்சுமி சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.

    இதுதொடர்பாக விஜய லட்சுமி திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியிடம் நகையை பறித்த கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்.

    திருமங்கலம் மறவன் குளத்தில் பட்டப்பகலில் தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×