search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியங்குடியில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது
    X

    புளியங்குடியில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

    புளியங்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    புளியங்குடி:

    புளியங்குடி போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சுதந்திர ராஜா. இவர் சம்பவத்தன்று புளியங்குடி அருகே உள்ள வெள்ளானைகோட்டை பகுதியில் ரோந்து மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் சுதந்திர ராஜாவின் வாகனத்தை நிறுத்தி அவரிடம் எதற்காக என்னைப் பற்றி என் ஊரில் வந்து விசாரணை நடத்தினீர்கள் என்று கேட்டு சுதந்திரராஜாவை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

    இது குறித்து சுதந்திர ராஜா அளித்த புகாரின் பேரில் புளியங்குடிபோலீசார் வழக்குபதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
    Next Story
    ×