search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓய்வூதியர்கள் வருமான வரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் - கருவூல அதிகாரி தகவல்
    X

    ஓய்வூதியர்கள் வருமான வரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் - கருவூல அதிகாரி தகவல்

    ஓய்வூதியர்கள் தங்களுடைய 2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை பெற்று, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கருவூல அதிகாரி மூக்கையா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவூலத்தின் வழியாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் கடந்த 1.4.2018 முதல் ஓய்வூதியம் மூலம் பெற்ற வருமானத்துடன் இதர வகை வருமானத்தையும் சேர்த்து ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்திற்கு மேல் வருமானம் பெற்ற ஓய்வூதியர்கள், தங்களுடைய 2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை பெற்று, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் மார்ச் 2018 முதல் டிசம்பர் 2018 வரை உள்ள காலத்தில் ஓய்வூதியம் எவ்வளவு பெறப்பட்டது என்பதை அறிவதற்கு tn.gov.ka-ruv-o-o-l-am.in என்ற இணையதளத்தில் ECS status of pe-ns-i-o-n-ers என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்காக கருவூலம் சென்று ஓய்வூதிய விவரங்களை பெற வேண்டியதில்லை.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×