search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலையில் காதல் தோல்வி அடைந்த பெயிண்டர் அடித்துக்கொலை
    X

    உடுமலையில் காதல் தோல்வி அடைந்த பெயிண்டர் அடித்துக்கொலை

    உடுமலையில் காதல் தோல்வி அடைந்த பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெண் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடுமலை:

    உடுமலை எஸ்.சி.புரம். கண்டிய கவுண்டன்புதூரை சேர்ந்தவர் முருகவேல் (வயது 25). இவர் நேற்று நள்ளிரவு அதே பகுதியில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி னார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் உடுமலை டி.எஸ்.பி. ஜெயசந்திரன், இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் முருகவேலுவும் ஒரு பெண்ணும் காதலித்து வந்ததும் இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததும் அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துவிட்டனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த முருகவேல் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் காதலி நினைவாகவே இருந்தார். பெண்ணின் பெற்றோரிடம் சென்று ஏன் உங்கள் பெண்ணை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுத்தீர்கள் என்று சத்தம்போட்டு புலம்பி வந்தார். இந்நிலையில் முருகவேல் இரும்பு பைபால் அடித்துக்கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது.

    இந்த கொலை தொடர்பாக பெண் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×