search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஐகோர்ட்
    X

    போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஐகோர்ட்

    ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால், அவர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. #ChennaiHighCourt #TNGovernment
    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில், கோகுல் என்ற பள்ளி மாணவன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர், ‘மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்கள் ஜனவரி 25-ந்தேதிக்கு முன்பாக பணிக்கு திரும்ப வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    எனினும், நேற்றும் ஆசிரியர்கள் பலர் வேலைக்கு வரவில்லை. இதையடுத்து, மனுதாரர் வக்கீல் நவீன்குமார் மூர்த்தி நேற்று நீதிபதிகள் முன்பு ஆஜராகி, ‘ஐகோர்ட்டு உத்தரவிட்டும், ஆசிரியர்கள் அந்த உத்தரவை அவமதிக்கும் விதமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு நீதிபதிகள், ‘ஆசிரியர்களின் போராட்டத்தை நாங்கள் சட்டவிரோதம் என்று அறிவிக்கவில்லை. மாணவர்களின் நலன் கருதி 25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டோம். ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால், அவர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், ஐகோர்ட்டு தலையிட முடியாது’ என்று கூறினர். #ChennaiHighCourt #TNGovernment
    Next Story
    ×