search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமைச் செயலகத்தில் யாகம் - ஓபிஎஸ், கிரிஜா வைத்தியநாதன் மீது ஐகோர்ட்டில் வழக்கு
    X

    தலைமைச் செயலகத்தில் யாகம் - ஓபிஎஸ், கிரிஜா வைத்தியநாதன் மீது ஐகோர்ட்டில் வழக்கு

    தலைமைச் செயலகத்தில் கோவில் கட்டி யாகம் நடத்தியது தொடர்பாக, துணை முதல்-அமைச்சர் ஓபிஎஸ், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது. #OPSYagam
    சென்னை:

    தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில், நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தியதாகவும், முதலமைச்சர் பதவியை கைப்பற்ற இந்த யாகத்தை நடத்தியதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
     
    இதற்கிடையே, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 
    தலைமைச் செயலகத்தில் உள்ள என்னுடைய அறையில் சாமி கும்பிடுவது வழக்கம், அதுபோல சாமி கும்பிட்டேன். யாகம் நடத்தவில்லை என்றார்.



    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் கோவில் கட்டி யாகம் நடத்தியது தொடர்பாக, துணை முதல்-அமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக, ஆனூர் ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார். அதில், உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்ததையொட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #OPSYagam
    Next Story
    ×