என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு அருகே காதல் தோல்வியால் கட்டிட தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்25 Jan 2019 11:12 AM GMT (Updated: 25 Jan 2019 11:12 AM GMT)
களக்காடு அருகே காதல் தோல்வியால் மன உளைச்சல் அடைந்த கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 47). இவர் தற்போது கோவையில் மனைவி மற்றும் 3 மகன்களுடன் வசித்து வருகிறார்.
இவரது 2-வது மகன் குமார் (18). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் தனது உறவினர் பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தாராம். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இசக்கி பாண்டி தனது மகன் குமாருடன் பொங்கல் விடுமுறைக்காக சுந்தரபாண்டியபுரத்திற்கு வந்துள்ளார். காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த குமார் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து இசக்கி பாண்டி களக்காடு போலீசில் புகார் செய்தார். களக்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X