search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே கத்தி முனையில் செயின் பறிப்பு-பிரபல ரவுடி கைது
    X

    சேலம் அருகே கத்தி முனையில் செயின் பறிப்பு-பிரபல ரவுடி கைது

    சேலம் அருகே கத்தி முனையில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). இவர் நேற்று அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த தொளசம்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி மாரியப்பன் (56) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் செயினை பறித்தார்.

    இது குறித்து பழனிசாமி சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாரியப்பனை கைது செய்தனர். மாரியப்பன் மீது ஏற்கனவே செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×