search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்னை மரங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரிய வழக்கு- அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
    X

    தென்னை மரங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரிய வழக்கு- அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

    கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #MaduraiHCBench
    மதுரை:

    தஞ்சாவூரை சேர்ந்த கோவிந்தராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல் மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்தது.

    இதில் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். மேலும் விவசாய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் துண்டு துண்டானது. தென்னை விவசாயத்தில் வருடத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 3 லட்சம் வரை வருமானம் வரும்.



    ஆனால் சேதமடைந்த தென்னை ஒன்றுக்கு தமிழக அரசு நிவாரண தொகையாக ரூ. 1,500 வழங்க உத்தரவிட்டுள்ளது.

    இது போதுமானதாக இல்லை. எனவே தென்னை ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும். மாவட்ட முழுவதும் மரங்கள் விழுந்துள்ளதை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் அகற்றவும், தென்னை விவசாயிகளுக்கு உயர் ரக தென்னங்கன்றுகளை மானிய விலையில் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர், விவசாயத் துறை செயலாளர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #GajaCyclone #MaduraiHCBench
    Next Story
    ×