search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
    X

    குன்னம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புஜங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவருடைய மனைவி சுதாராணி(வயது 32). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சுதாராணி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று சுதாராணிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதாராணி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    Next Story
    ×