என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோதண்டராமர் சிலை கொண்டுசெல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்23 Jan 2019 2:52 PM GMT (Updated: 23 Jan 2019 5:32 PM GMT)
ஊத்தங்கரை அருகே கோதண்டராமர் சிலை கொண்டுசெல்ல எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை பகுதியில் கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கோதண்டராமர் சிலை ஊத்தங்கரை நான்கு முனைசந்திப்பு வழியாக பெங்களூரு கொண்டு செல்ல இருக்கிறது.
இந்த நிலையில் சிலையை கொண்டுசெல்ல ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள அண்ணாசிலை ரவுண்டானா இடையூறாக இருப்பதாக கூறி அதனை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றி கொண்டிருந்தனர். தகவல் அறிந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமையில், மாவட்ட செய்தி தொடர்பாளர், மாவட்ட பொருளாளர், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தண்ணீர் கொடுக்காத கர்நாடகாவிற்கு தமிழ்நாட்டின் கனிமவளம் மட்டும் வேண்டுமா? என முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை செய்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஊத்தங்கரை டி.எஸ்.பி.யிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X