search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது குடிக்க மனைவி பணம் தராததால் வாலிபர் தற்கொலை
    X

    மது குடிக்க மனைவி பணம் தராததால் வாலிபர் தற்கொலை

    அரியலூர் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வங்குடி மேல காலனி தெருவை சேர்ந்தவர் கங்காதேவி(வயது 29). இவருக்கும், கடலூர் மாவட்டம் சி.அரசூர் கிராமத்தை சேர்ந்த இன்பராஜாவுக்கும்(34) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது 3 மகன்களுடன் கங்காதேவி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். அங்கு கங்காதேவி கூலி வேலைக்கு சென்று மகன்களை படித்து வைத்து வருகிறார்.

    இருப்பினும் இன்பராஜா அடிக்கடி கங்காதேவி வீட்டிற்கு சென்று, அவரிடம் மது குடிக்க பணம் கேட்பது வழக்கம். அதேபோல் அவர் சம்பவத்தன்று இரவு மது குடிக்க, கங்காதேவியிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. கங்காதேவி பணம் கொடுக்க மறுத்தார். இதனால் மனமுடைந்த இன்பராஜா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×