search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையோர தடுப்பில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி
    X

    சாலையோர தடுப்பில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி

    மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சாலையோர தடுப்பில் மோதி பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    மதுரை பெருங்குடி அருகில் உள்ள பெரிய ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சோணை (வயது26). இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வலையப்பட்டி-பெரிய ஆலங்குளம் ரோட்டில் ரைஸ்மில் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட சோணை படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சோணை வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக சோணையின் தந்தை ராமன் பெருங்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாடிப்பட்டி அருகே உள்ள மலையாண்டிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (30). இவர் பழனிக்கு பாதயாத்திரை சென்றார்.

    மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் தனிச்சியம் சந்திப்பு அருகே சென்ற போது வேன் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் படுகாயம் அடைந்தார்.

    இதுதொடர்பாக ராஜ்குமாருடன் பாதயாத்திரை சென்ற கொடிக்குளம் சேவுகன் (55) கொடுத்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×