search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடத்தையில் சந்தேகம் - மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர்
    X

    நடத்தையில் சந்தேகம் - மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர்

    தாராபுரம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்த கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் மரவபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). கூலித்தொழிலாளி.

    இவரது மனைவி துளசி மணி (35). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை அவர்களுக்குள் தகராறு நீடித்தது.

    பின்னர் துளசி மணி வீட்டின் வெளியே நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார். அப்போது ஆத்திரத்தில் இருந்த ஆ செந்தில் குமார் தனது மனைவியின் பின் பக்கமாக சென்று காய்கறி அறுக்கும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

    அதிகாலை நேரத்தில் செந்தில் குமாரின் மகள் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது தனது தாய் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போட்டார். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் குண்டடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துளசிமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது துளசிமணி நடத்தையில் சந்தேகத்தில் அவரை செந்தில் குமார் கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. அவரை தேடி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×