search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மீது டெஸ்மா சட்டம் பாயுமா?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்
    X

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மீது டெஸ்மா சட்டம் பாயுமா?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மீது டெஸ்மா சட்டம் பாயுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். #JactoGeo #Sengottaiyan
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர் களிடம் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும். பொதுத் தேர்வு நடைபெற உள்ள இந்த நேரத்தில் வேலை நிறுத்தம் என்பது மாணவர் சமுதாயத்துக்கு பெரும் சங்கடத்தை உருவாக்கும். எனவே போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அரசின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.

    இன்றுதான் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக போகத்தான் இதை கண்காணித்து முதல்- அமைச்சருடன் கலந்து பேசி என்ன முடிவு எடுக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும்.

    ஆசிரியர்களுக்கும் துறை சார்பில் தேவையான அறிவுரையும் வழங்கப்பட்டு உள்ளது.


    போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மீது டெஸ்மா, எஸ்மா சட்டம் பாயுமா? என்ற சிக்கலான கேள்விகளை கேட்கக் கூடாது.

    இந்த போராட்டம் தொடருமா? தொடராதா? என்பது நாளைதான் தெரிய வரும். அதன் பிறகு இதில் என்ன முடிவு எடுப்பது என்பதை அமைச்சர்கள் முடிவு செய்வார்கள்.

    எனவே மனித நேயத்தோடு ஆசிரியர்களும் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo #Sengottaiyan
    Next Story
    ×