search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டுப்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதி பெண் பலி
    X

    காட்டுப்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதி பெண் பலி

    காட்டுப்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரகீம். இவரது மனைவி சஜிதா. இன்று காலை கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.

    வானகரம் அருகே வந்தபோது அவ்வழியே வந்த தண்ணீர் லாரி திடீரென அப்துல்ரகீம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சஜிதா சம்பவ இடத்திலேயே பலியானார். அப்துல்ரகீம் லேசான காயத்துடன் தப்பினார்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போக்குவரத்து போலீசார் லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×