என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்20 Jan 2019 6:06 PM GMT (Updated: 20 Jan 2019 6:06 PM GMT)
சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோஅமைப் பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை:
அங்கன்வாடி பணிக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதில் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களை மூடக்கூடாது.
புதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது. மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், நாகேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ-ஜியோவின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக் குமார், முத்துசாமி, ரவிச்சந்திரன், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோவன், ஜோசப் சேவியர், மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அன்பரசு, பிரபாகர், ராஜா, செல்வக்குமார், தமிழரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அங்கன்வாடி பணிக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதில் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களை மூடக்கூடாது.
புதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது. மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், நாகேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ-ஜியோவின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக் குமார், முத்துசாமி, ரவிச்சந்திரன், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோவன், ஜோசப் சேவியர், மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அன்பரசு, பிரபாகர், ராஜா, செல்வக்குமார், தமிழரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X