என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செய்யாறு அருகே ஆட்டோ டிரைவர் கிணற்றில் தவறி விழுந்து பலி
Byமாலை மலர்20 Jan 2019 5:51 PM GMT (Updated: 20 Jan 2019 5:51 PM GMT)
செய்யாறு அருகே குடும்பத்தினருடன் கோவிலுக்கு ஆட்டோவில் வந்து விட்டு திரும்பியபோது மாயமான ஆட்டோ டிரைவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
செய்யாறு:
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா. பொங்கலையொட்டி இவர்கள் தங்கள் உறவினர்களுடன் ஆட்டோவில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள சேராம்பட்டு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அவர்கள் மீண்டும் ஆட்டோவில் சென்னைக்கு புறப்பட்டனர். காஞ்சீபுரம் சாலையில் இருமந்தாங்கல் கிராமத்திற்கு அருகே சென்றபோது ஆட்டோவை நிறுத்திவிட்டு கழிப்பறைக்கு செல்வதாக கூறி மகேந்திரன் சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
ஆட்டோவில் காத்திருந்த அவரது மனைவி மஞ்சுளா மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ நிறுத்தப்பட்ட இடத்தின் அருகே உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவரின் பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மகேந்திரனின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு வரவழைத்தனர். இறந்து கிடந்தது மகேந்திரன்தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். கழிப்பறைக்கு சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து அவர் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் செய்யாறில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா. பொங்கலையொட்டி இவர்கள் தங்கள் உறவினர்களுடன் ஆட்டோவில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள சேராம்பட்டு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அவர்கள் மீண்டும் ஆட்டோவில் சென்னைக்கு புறப்பட்டனர். காஞ்சீபுரம் சாலையில் இருமந்தாங்கல் கிராமத்திற்கு அருகே சென்றபோது ஆட்டோவை நிறுத்திவிட்டு கழிப்பறைக்கு செல்வதாக கூறி மகேந்திரன் சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
ஆட்டோவில் காத்திருந்த அவரது மனைவி மஞ்சுளா மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ நிறுத்தப்பட்ட இடத்தின் அருகே உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவரின் பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மகேந்திரனின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு வரவழைத்தனர். இறந்து கிடந்தது மகேந்திரன்தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். கழிப்பறைக்கு சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து அவர் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் செய்யாறில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X