search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசி அருகே ஜல்லிக்கட்டு- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்
    X

    சிவகாசி அருகே ஜல்லிக்கட்டு- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்

    சிவகாசி அருகே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. போட்டியை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். #jallikattu #ministerrajendrabalaji

    சிவகாசி:

    சிவகாசி அருகே ஈஞ்சார் நடுவப்பட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 18பட்டி கிராம மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.

    ஆலடி ஈஸ்வர் கோவில் முன்பு காலை 7 மணிக்கு விருதுநகர் மாவட்ட அ.தி. மு.க. செயலாளரும், பால் வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராதாகிருஷ் ணன் எம்.பி., சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன் மற்றும் அதிகாரிகள் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாடுபிடி வீரர்களும், மாடு உரிமையாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியான காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன. ஏராளமான வீரர்கள் களத்தில் இறங்கி மாடுகளை அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பிடிபடாமல் போன காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண ஈஞ்சார், நடுவப்பட்டி, வேண்டுராயபுரம், மல்லி, நிறைமதி, கிருஷ்ண பேரி, வடபட்டி உள்பட சிவகாசி மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

    பொதுமக்கள் பாதுகாப்பாக அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சியில் சிவகாசி யூனியன் ஆணையாளர்கள் சுப்பிரமணியன், சங்கர நாராயணன், தாசில்தார் பரமானந்தராஜா, அ.தி. மு.க. ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #jallikattu #ministerrajendrabalaji

    Next Story
    ×