search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராலிமலை ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் பலி- 15 வீரர்கள் படுகாயம்
    X

    விராலிமலை ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் பலி- 15 வீரர்கள் படுகாயம்

    விராலிமலை இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் பலியானார். 15 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். #jallikattu
    விராலிமலை:

    விராலிமலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இன்று பகல் 12 மணி வரை 375 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். 

    சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து சென்றது. போட்டியில் காளைகள் முட்டியதில் 15 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். 

    இதனிடையே வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளை ஒன்று வீரர்களின் பிடியில் சிக்காமல் மைதானத்தில் இருந்து வெளியே பாய்ந்து சென்றது. அப்போது அந்த காளை திடீரென பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் சொரியம்பட்டியைச் சேர்ந்த ராமு (வயது 25) என்பவரை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் குடல் சரிந்து பலத்த காயமடைந்தார். உயிருக்கு போராடிய அவரை பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு ஜல்லிக்கட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமிற்கு கொண்டு சென்றனர். 

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக  புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே ராமு பரிதாபமாக உயிரிழந்தார். #jallikattu
    Next Story
    ×