என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யாகம் நடத்தியதற்கான ஆதாரம் இருக்கிறதா?, இது வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்
Byமாலை மலர்20 Jan 2019 8:30 AM GMT (Updated: 20 Jan 2019 8:30 AM GMT)
தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக வந்த செய்து வதந்தியே என அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
சோழிங்க நல்லூரில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ இல்லத் திருமண நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு லோகேஷ் - ஜெயஸ்ரீ திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் முக ஸ்டாலின் அரசியல் குறித்து பேசினார். அப்போது ‘‘தற்போது தலைமைச் செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது அறையில் நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தி இருக்கிறார் என்ற செய்தி வருகிறது.
எதற்கு இந்த யாகம்? ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதுபோல் கொடநாடு வழக்கு முடியும்போது எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்றுவிடுவார். முதல்-அமைச்சர் பதவி காலியாக போகிறது என்பதால் அதை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக சொல்கிறார்கள்.
முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு யாகம் நடத்தினாரா? அல்லது அங்குள்ள கோப்புகளை எடுத்ததற்காக யாகம் நடத்தினார்களா? என்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் சொல்லியே தீர வேண்டும்’’ என்றார்
இந்நிலையில் முக ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதலளித்து கூறுகையில் ‘‘துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தியதற்கான ஆதாரம் இருக்கிறதா?. இது வதந்தியே. அவர் யாகம் நடத்தியதை யார் பார்த்தார்கள்?.
அதிமுக கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முக ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் செய்த சதிதான் இது. காலையில் எழுந்த உடனே என்ன சூழ்ச்சி செய்யலாம் என நினைக்கிறார்கள்’’ என்றார்.
பின்னர் முக ஸ்டாலின் அரசியல் குறித்து பேசினார். அப்போது ‘‘தற்போது தலைமைச் செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது அறையில் நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தி இருக்கிறார் என்ற செய்தி வருகிறது.
எதற்கு இந்த யாகம்? ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதுபோல் கொடநாடு வழக்கு முடியும்போது எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்றுவிடுவார். முதல்-அமைச்சர் பதவி காலியாக போகிறது என்பதால் அதை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக சொல்கிறார்கள்.
முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு யாகம் நடத்தினாரா? அல்லது அங்குள்ள கோப்புகளை எடுத்ததற்காக யாகம் நடத்தினார்களா? என்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் சொல்லியே தீர வேண்டும்’’ என்றார்
இந்நிலையில் முக ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதலளித்து கூறுகையில் ‘‘துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தியதற்கான ஆதாரம் இருக்கிறதா?. இது வதந்தியே. அவர் யாகம் நடத்தியதை யார் பார்த்தார்கள்?.
அதிமுக கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முக ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் செய்த சதிதான் இது. காலையில் எழுந்த உடனே என்ன சூழ்ச்சி செய்யலாம் என நினைக்கிறார்கள்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X