search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோமங்கலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல் -  2 கல்லூரி மாணவர்கள் பலி
    X

    சோமங்கலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல் - 2 கல்லூரி மாணவர்கள் பலி

    சோமங்கலம் அருகே விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது19). இவர் தாம்பரம் பகுதியில் உள்ள கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.

    இவர் உடன்படிக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரதாபன் (18), அடையாறு, சத்யா நகரை சேர்ந்த அரிகிருஷ்ணன் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சோமங்கலம் நோக்கி சென்றனர்.

    சோமங்கலம் அருகே, எட்டையூரில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் திடீரென விக்னேஷ் மற்றும் நண்பர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் விக்னேஷ், பிரதாபன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் அரிகிருஷ்ணன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்த சோமங்கலத்தை அடுத்த மேட்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய்குமார், அவரது தம்பி சதிஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மோதிய வேகத்தில் 2 மோட்டார் சைக்கிளும் நொறுங்கியது. இதுகுறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    Next Story
    ×