search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் விழாவையொட்டி கல்லல், சிங்கம்புணரி பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயம்
    X

    பொங்கல் விழாவையொட்டி கல்லல், சிங்கம்புணரி பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயம்

    பொங்கல் விழாவையொட்டி கல்லல், சிங்கம்புணரி பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
    கல்லல்:

    கல்லல் ஒன்றியம் ஏழுமாப்பட்டி கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஏழுமாப்பட்டி-மானகிரி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 38 வண்டிகள் கலந்து கொண்டு பெரியமாடு, சின்னமாடு என 2 பிரிவாக போட்டிகள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்து கொண்டன. அதில் முதல் பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும், 2-வது பரிசை காடனேரி நந்திகுமார்கேசவன் வண்டியும், 3-வது பரிசை பொய்யாதநல்லூர் அப்பாஸ் வண்டியும் பெற்றன.

    இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 26 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் வண்டியும், 2-வது பரிசை தானாவயல் வெங்கடாச்சலம் வண்டியும், 3-வது பரிசை சாத்திக்கோட்டை கருப்பையா வண்டியும் பெற்றன.

    இதேபோல் காரைக்குடி அருகே உள்ள தளாக்காவூர் மானகிரியில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் மானகிரி-கல்லல் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு, சின்னமாடு என 2 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கல்லூரணி காவேரி கருப்பையா பாலாஜி வண்டியும், 2-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும், 3-வது பரிசை கல்லணை விஸ்வாரவிச்சந்திரன் வண்டியும் பெற்றன.

    பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை ப.தனக்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி வண்டியும், 2-வது பரிசை வெள்ளரிப்பட்டி சமர்சித் வண்டியும், 3-வது பரிசை தானாவயல் வெங்கடாச்சலம் மற்றும் அழகிச்சிப்பட்டி பாஸ்கரன் வண்டிகளும் பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சிங்கம்புணரி அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. அரளிக்கோட்டை விலக்கில் இருந்து தானியபட்டி விலக்கு வரை நடைபெற்ற போட்டியில் 12 பெரியமாட்டு வண்டிகளும் 18 சின்னமாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பெரியமாடு போட்டியில் நகரம்பட்டி கண்ணன் வண்டி முதல் பரிசையும், 2-வது பரிசை கவிதாம்பட்டி அமர்நாத் வண்டியும், 3-வது பரிசை மாம்பட்டி பாரிவள்ளல் வண்டியும் பெற்றன. சின்னமாடு போட்டியில் கள்ளஞ்சேரி சிவப்பிரபு வண்டி முதல் பரிசையும், நகர பட்டி கண்ணன் வண்டி 2-வது பரிசையும், தேவகோட்டை செல்வராஜ் வண்டி 3-வது பரிசையும் பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பாஸ்கரன், வக்கீல் பாலா, மாவட்ட பேரவை செயலாளர் ஆவின் தலைவர் அசோகன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். விழாவில் மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜா, சிங்கம்புணரி ஒன்றிய கழக செயலாளர் வாசு, பேரவை துணை செயலாளர் திருவாசகம், ஆபத்தாரணப்பட்டி கிளை கழக நிர்வாகிகள் சகாதேவன், சுரேஷ், வீரப்பன், முருகன், கோபு, பாலசுப்பிரமணியன். இளங்குமார் மாது, ஜெகன், அருணாச்சலம் ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஏரியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பிரபு, திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×