search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலத்தூர் அருகே எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் - எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
    X

    ஆலத்தூர் அருகே எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் - எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

    எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமையில் நடைபெற்றது.
    குன்னம்:

    பெரம்பலூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஆலத்தூர் ஒன்றியம் அடைக்கம்பட்டி எம்.ஜி.ஆர் திடலில் மறைந்த அ.தி.மு.க. நிறுவனரும், தமிழக முதல்வரும்மான எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆலத்தூர் ஒன்றிய செய லாளர் என்.கே.கர்ணன் தலைமையில் நடைபெற்றது.

    அனைவரையும் வேப்பந் தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார். மாவட்ட அவை தலைவர் துரை, மாவட்ட இணைசெயலாளர் ராணி, துணை செயலாளர் லட்சுமி, முன்னாள் தொகுதி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினரும்மான ஆர்.டி.ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளரும் சிதம்பரம் எம்.பி.யும்.மான சந்திரகாசி, பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாரும் எம்.பி.யும்மான மருதராஜா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன், தலைமை கழக பேச்சாளர்கள் சிவகாசி சின்னதம்பி,திட்டை மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    விழாவில் அடைக்கம்பட்டி குருசாமி, ரமேஷ், ராஜ், மாரிமுத்து,மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற செயலாளர் ராஜராம், ஜெ.பேரவை செயலாளர் உதயம் ரமேஷ், ராமலிங்கம், முத்தமிழ், ராஜேஸ்வரி, வீரபாண்டியன், முத்துசாமி, லேட்டஸ்ட் செல்வராஜ், மதுபாலன், செட்டிகுளம் தங்கராசு, மார்கண்டன், திருநாவுகரசு, தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பெரம்பலூர் நகர செயலாளர் ராஜ பூபதி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் செய்திருந்தார். #ADMK
    Next Story
    ×