என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலாஜா தொழிலாளி உயிரிழப்பு - மணல் லாரி டிரைவர் கைது
Byமாலை மலர்19 Jan 2019 10:29 AM GMT (Updated: 19 Jan 2019 10:29 AM GMT)
வாலாஜா எடக்குப்பம் கிராமம் அருகே மணல் லாரி காம்பவுண்ட் சுவர் மீது மோதியதில் இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர்.
வாலாஜா:
வாலாஜா எடக்குப்பம் கிராமம் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 37). தொழிலாளி. இவரது மனைவி யாமுனாநதி. இவர்களுக்கு 2 மகளும் 1 மகனும் உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு ராதாகிருஷ்ணன் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு அவரின் வீட்டு வழியாக மணல் ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.
ராதாகிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ராதாகிருஷ்ணன் இறந்தார்.
இதையடுத்து யமுனாநதி தனக்கு நிவாரண நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தனது பிள்ளைகளுடன் வந்து மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் வாலாஜா அடுத்த தகரகுப்பம் திருமலை நகர் பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது 35). என்பவரை நேற்று மாலை வாலாஜா போலீசார் கைது செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் சீனு என்பரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா எடக்குப்பம் கிராமம் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 37). தொழிலாளி. இவரது மனைவி யாமுனாநதி. இவர்களுக்கு 2 மகளும் 1 மகனும் உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு ராதாகிருஷ்ணன் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு அவரின் வீட்டு வழியாக மணல் ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.
ராதாகிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ராதாகிருஷ்ணன் இறந்தார்.
இதையடுத்து யமுனாநதி தனக்கு நிவாரண நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தனது பிள்ளைகளுடன் வந்து மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் வாலாஜா அடுத்த தகரகுப்பம் திருமலை நகர் பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது 35). என்பவரை நேற்று மாலை வாலாஜா போலீசார் கைது செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் சீனு என்பரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X