search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர் அருகே மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு- போக்சோவில் வாலிபர் கைது
    X

    ஆம்பூர் அருகே மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு- போக்சோவில் வாலிபர் கைது

    ஆம்பூர் அருகே 17 வயது மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பள்ளிதெரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவருக்கும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் தனசேகரன் (வயது 26). என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த மாதம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடியும் காணவில்லை .

    இது குறித்து மாணவியின் பெற்றோர் உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் தனசேகர் என்பவர் ஆசை வார்த்தை கூறி எனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறியிருந்தனர். இதையடுத்து போலீசார் தனசேகரனை பிடித்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் 17 வயது மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததிற்காக தனசேகரனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    Next Story
    ×