என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அருகே பாத்திர வியாபாரி மர்ம மரணம்
Byமாலை மலர்19 Jan 2019 9:43 AM GMT (Updated: 19 Jan 2019 9:43 AM GMT)
திருச்சி துவாக்குடி டோல்கேட் அருகே உள்ள காலிமனை பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வியாபாரி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
திருவெறும்பூர்:
திருச்சி துவாக்குடி டோல்கேட் அருகே உள்ள காலிமனை பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை அங்கு ஆடு மேய்க்க சென்ற தொழிலாளர்கள் பார்த்து உடனடியாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் அழகம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தவர் துண்டால் தூக்குப்போட்டு தலை துண்டான நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது கைகள் கட்டப்பட்டிருந்தது.
இறந்தவர் யார், எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சட்டைப்பையில் இருந்த செல்போன் எண்ணை வைத்து தொடர்பு கொண்டு விசாரணை நடத்திய போது அவர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த பாத்திர வியாபாரி நடராஜன் (வயது 50) என்பது தெரியவந்தது. வியாபாரத்தில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலரிடம் கடன் வாங்கி தொழிலை நடத்தி வந்துள்ளார். கடன் அதிகமானதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.
இந்தநிலையில் அவர் துவாக்குடி பகுதியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது கடன் பிரச்சனையில் மர்மநபர்கள் யாராவது அவரை கடத்தி சென்று கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி துவாக்குடி டோல்கேட் அருகே உள்ள காலிமனை பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை அங்கு ஆடு மேய்க்க சென்ற தொழிலாளர்கள் பார்த்து உடனடியாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் அழகம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தவர் துண்டால் தூக்குப்போட்டு தலை துண்டான நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது கைகள் கட்டப்பட்டிருந்தது.
இறந்தவர் யார், எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சட்டைப்பையில் இருந்த செல்போன் எண்ணை வைத்து தொடர்பு கொண்டு விசாரணை நடத்திய போது அவர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த பாத்திர வியாபாரி நடராஜன் (வயது 50) என்பது தெரியவந்தது. வியாபாரத்தில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலரிடம் கடன் வாங்கி தொழிலை நடத்தி வந்துள்ளார். கடன் அதிகமானதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.
இந்தநிலையில் அவர் துவாக்குடி பகுதியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது கடன் பிரச்சனையில் மர்மநபர்கள் யாராவது அவரை கடத்தி சென்று கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X