search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவில் அருகே தி.மு.க. பிரமுகரை வெட்டிய ரவுடி மீது 5 பிரிவுகளில் வழக்கு
    X

    நாகர்கோவில் அருகே தி.மு.க. பிரமுகரை வெட்டிய ரவுடி மீது 5 பிரிவுகளில் வழக்கு

    நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தி.மு.க. பிரமுகரை தடுத்து நிறுத்தி வெட்டிய ரவுடி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர் .

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே வெள்ளமடம் வேம்பத்தூர் கண்ணாநகரைச் சேர்ந்தவர் இம்மானுவேல், (வயது 52). இவர் பீமநேரி தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார். இவர், தனது நண்பர்கள் ரீமாஸ் (30), சுந்தருடன் மோட்டார் சைக்கிளில் கடம்படி விளாகம் பகுதியில் உள்ள துக்க வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சந்தைவிளை பகுதியில் உள்ள செங்கட்டி பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இவர்களது மோட்டார் சைக்கிளை அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (28) மற்றும் அவரது நண்பர்கள் சிலர் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர்.

    திடீரென இம்மானுவேலுவை அரிவாளால் வெட்டினார்கள். இதை தடுக்க வந்த ரீமாசுக்கும் வெட்டு விழுந்தது. இவர்களது சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தப்பியோடி விட்டனர்.

    படுகாயம் அடைந்த இம்மானுவேல் ரீமாஸ் ஆகியோர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இம்மானுவேல் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச்சட்டம் 341, 294 (பி), 324, 327, 506(2) ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் சிக்க வில்லை. ராஜ்குமார் மீது ஏற்க னவே பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

    Next Story
    ×